search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள்"

    • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன.

    திருப்பூர்:

    ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் விண்கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்று அவற்றிற்கு பெயர் வைக்கும் வாய்ப்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அறிவியல் கல்வி நிறுவனமான ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விண்கற்களை கண்டறிவதற்கான பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சர்வதேச வானியல் தேடல் கூட்டமைப்பான ஐ.எஸ்.ஏ.சி., மற்றும் நாசா இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்படும் படங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.பிரத்யேக மென்பொருள் உதவியோடு, படங்களில் இருப்பவை விண்கற்களா என மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ந்து, நகரும் பொருட்கள் இருப்பின் மீண்டும் வானியலாளர்களுக்கு அனுப்பப்படும்.

    பல நிலை பரிசோதனைகளுக்கு பின், மாணவர்கள் அனுப்பியவை விண்கற்கள் என அடையாளம் காணப்பட்டால் அதற்கு பெயர் வைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இது குறித்து ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் உதவி அறிவியலாளர் கிரித்திகா கூறியதாவது:-

    சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. விண்கற்களை கண்டறிவதன் வாயிலாக அதன் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.இதற்காக, வானியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விண்கற்கள் தேடுதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு பின் திட்டத்தில் பங்கேற்பாளர்களாக சேர்க்கப்படுவர்.நவம்பர் மாதம் ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குவதால், ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் www.openspacefoundation.in என்ற இணையதளத்திலோ அல்லது 99522 09695 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
    • அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

    தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

    கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

    சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.

    மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார்.
    • திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோகண்டி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் வருகை மற்றும் காலை உணவுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் வகுப்பறை ஒன்றுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார். கலெக்டர் ராகுல்நாத்தின் இந்த செயல்முறையை மாணவ-மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் ராகுல்நாத் பாராட்டினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பவானி உடன் இருந்தார்.

    • சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
    • 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியில் சேர்ந்த காலங்கள் முதல் 100 சதவீதம் தேர்ச்சியும். மாணவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டு யோகா போன்றவர்கள் தனி ஆர்வம் கொண்டு காலை மாலை என சிறப்பு வகுப்புகள் எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார்.

    இந்த பள்ளியில் 50 மாணவர்கள் என்ற நிலையில் இருந்த இப்பள்ளியானது தற்பொழுது 150 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மாணவர்களின் அன்பை பெற்ற ஆசிரியர் சத்திய சுதந்திரத்தை அவரது கிராமத்தில் தண்ணீர் செல்லும் கால்வாய்க்கு இவர் ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

    புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் சத்திய சுந்தரத்தை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவானது நேற்று மாலை பள்ளிக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் ஆனது மாணவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து வகுப்புக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்து பள்ளியின் வளாகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அங்கு வந்த தலைமை ஆசிரியர் மாது, போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் ஆசிரியரை பணியமர்த்த வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணியிடம் மாற்றம் உத்தரவானது புகார் நிரூபிக்கப்பட்டால் தொடரும். இல்லையெனில் அந்த உத்தரவு ரத்து செய்து அவரை மீண்டும் அதே பள்ளியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றார்.

    • குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
    • தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் இருந்து மாதப்பூர் வழியாக ஏராளமான பள்ளி மாணவர்கள், பல்லடம் மற்றும் பொங்கலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பல்லடத்திலிருந்து சமத்துவபுரம், மாதப்பூர் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசு பஸ், ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

    இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மனு அளித்தும் இதுவரை கூடுதல் பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்குவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே நேற்று காலை மாதப்பூரில் இருந்து பொங்கலூர் அரசு பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்களை கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றதால், பள்ளிக்கு செல்ல முடியாமல் அந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இந்தநிலையில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பஸ்சுக்காக நல்லா கவுண்டம்பாளையத்தில் இருந்து மாதப்பூர் வரை 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே வருவதாகவும் மாதப்பூரில் இருந்து பொங்கலூர் செல்ல முறையான பஸ்வசதி இல்லாததால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு பஸ் ஓட்டுனரிடம் கேட்டபோது, பல்லடம், சமத்துவபுரம், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் வருகின்றனர்.

    கூடுதல் பஸ் வசதி இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் இது குறித்து அரசு போக்குவரத்து டிப்போவில் தெரிவித்துள்ளதாகவும், கூடுதல் பஸ்களை இயக்கினால் மட்டுமே இந்தப்பிரச்சனை தீரும் என்று தெரிவித்தார்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அந்தத் திட்டப் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி மேற்பார்வையாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார். இதில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்?. உணவு விநியோகம் செய்வது, குறிப்பிட்ட கால அளவில் உணவை பள்ளி மாணவர்களுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
    • கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிராட்வேயில் இருந்து மாநகர பஸ் வழித்தடம் எண் 11ஜி நேற்று மாலை பயணிகளுடன் அய்யப்பந்தாங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராமய்யா ஓட்டி சென்றார்.

    கே.கே நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதை டிரைவர் ராமய்யா கண்டித்தார். இதனால் ஆத்திர மடைந்த பள்ளி மாணவர்கள் திடீரென பஸ்சில் இருந்து கீழே இறங்கி கைகளால் சரமாரியாக குத்தி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி, பாரத் வித்யா மந்திர் பள்ளிகள் உள்ளிட்ட பாரத் கல்விக்குழுமத்தில் பெகாசஸ்-2023 கலைத் திருவிழா போட்டிகள் நடை பெற்றது. பாரத் கல்விக் குழும தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், முதல்வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரஜ் வரவேற்று பேசினார்.

    கனிஷ்கா மற்றும் உஷாஷீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பாரத் கல்வி குழும தலைவர், செயலாளர், முதல்வர்கள், கல்வி ஆலோசகர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து குத்து விளக்கேற்றி கலை விழா போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    காலையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மழலையர் பிரிவினருக்கு வர்ணம் தீட்டுதல், பாடல் ஒப்புவித்தல், புராண கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் சித்தரிப்பு ஆகிய போட்டிகளும், 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடனம், ஆங்கில பொருளறிதல், திறன் தேர்வு, படங்களை தேர்வு செய்து ஒட்டுதல் ஆகிய போட்டிகளும், 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதை முடிவை தெரிவித்தல், தேவையற்ற ஆடைகளில் இருந்து உடை அலங்காரம் செய்தல், நடனம் ஆகிய போட்டிகளும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வடிவமைப்பு, புதிர் ஆகிய போட்டிகளும், 9 முதல் பிளஸ்-2 வரை மிஸ், மாஸ்டர் பெகாசஸ், வினாடி -வினா, குழு பாடல் ஆகிய போட்டிகளும் நடை பெற்றது. மேலும் 1 முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு குழு பாடல், கணிதம் மற்றும் அறிவியல் திறனறி தேர்வு ஆகிய போட்டிகளும் நடை பெற்றன.

    இதில் 30-க்கும் மேற் பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இலஞ்சி ஆக்ஸிஸ் வங்கி முதன்மை மேலாளர் மாரியப்பன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 3 இடம் பெற்ற பள்ளிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். அவரைத் தொடர்ந்து பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்க ளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி னர்.

    முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பெகாசஸ் சுழற்சின்ன பரிசும், 2-ம் இடம் பெற்ற எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, கேடயமும், 3-ம் இடம் பெற்ற கிங்ஸ் ஸ்கூல் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் விழாவின்போது திறன்மிகு ஆசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருது கள் வழங்கப்பட்டன. பாரத் வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாக செயல்பட்டனர். ஆக்ஸிஸ் வங்கி, டிரிஸில் உணவகம், பிரசாந்தி மருத்துவமனை, பி.கே.போட்நிக், வேலவன் புத்தக மையம், செக்யூர் ஐ.டி டெக், இன்பைனைட் லேர்னிங், ரூத் சிப்பிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பெகாசஸ் -2023 கலைத் திருவிழா போட்டிக்கு நன்கொடை அளித்திருந்தனர்.

    ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செய லாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், பள்ளி முதல்வர் வனிதா, ஆலோச கர் உஷா ரமேஷ் மற்றும் இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    2023-24-ம் நிதி யாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப் படும் என மத்திய அரசால் அறி விக்கப்பட்டு ள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்ப டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடி ப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு 10.8.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.

    மேலும் விவரங்கள் https://hyet.nta.ac.inமற்றும் https://socialjustice.gov. ஆகிய இணையதள முகவரி களில் வெளியி டப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூலை 18-ந்தேதி “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார்.

    அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    மாவட்ட அளவில் கட்டுரை.

    பேச்சு ப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ ர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவி க்கப்படும்.

    இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்.
    • முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.

    இதன்படி, வருகிற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) அன்று திருவாரூர் மாவட்ட த்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.

    போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தேர்வு செய்து அனுப்புவார். கட்டுரை போட்டிக்கு, தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள், பேச்சு போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமி ழறிஞர் கலைஞரின் எழுதுகோல் தலைப்பு ஆகும்.

    போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.

    பள்ளிகளில் பயிலும் மாணவ ,மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.

    இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×